Friday, June 24, 2011

நிம்மதி எங்கே என்று தேடிப்பார்த்தேன் அது எங்கேயும் இல்லை....

முந்தைய மாதிரி லைப்பில இப்ப நிம்மதி என்ற சொல்லுக்கே இடமில்ல. எத தொட்டாலும் பிரச்சனை தலை பிய்க்கிறது. ஏன் வீடு, வேலை செய்யும் இடத்தில் கூட இப்படி நிம்மதியை தேட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுக்கிறோம் என்றால் அது பொய்யல்ல. இப்படியான நிலையில் இருக்கையில் எனது நண்பர் ஒருவர் பேஸ்புக்கில்(Facebook) நிம்மதியை பற்றிய கதையை பிரசுரித்த போது இது எனக்கு பிடித்திருந்தது. ஆகையால் இந்த கதையை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன் வாசர்களே!


நிம்மதி இழப்பது எதனால்? Good Question(இது நல்ல கேள்வி)
ஒரு துறவி இருந்தார்.அவரிடம் பணக்காரர் ஒருவர் வந்தார்.சுவாமி என்னிடம் நிறைய செல்வமிருந்தும் நிம்மதி இல்லை. என்ன காரணம் என்பது புரியவில்லை?என்று கேட்டார். அதற்கு துறவி பதில் சொல்லவில்லை.
அங்கே விளையாடிகொண்டிருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.அதன் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார். குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக்கொண்டது. அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார். அதையும் இன்னொரு கையால் வாங்கிக்கொண்டது. மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார். தன்னுடைய ஒருகையால் இருபழங்களையும் மார்போடு அணைத்துக்கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது. ஆனால் ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது. அதைக்கண்டு அந்த குழந்தை அழுதது .இதை கவனித்துக் கொண்டிருந்த அந்த பணக்காரரிடம் அந்த துறவி 'இந்த குழந்தையை பார்த்தாயா? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?' அதே போன்றுதான் 'போதும்' என்ற திருப்தி ஏற்பட்டுவிட்டால் பிரச்சனை வாரது. நிம்மதி கிடைக்கும். பணக்காரருக்கு தனக்கு ஏன் நிம்மதி இல்லை என்ற விவரம் புரிந்துவிட்டது.




உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு!!!!! இந்த வரியைக் கேட்கும் போது மனம் நெகிழ்கின்றது....
 
நன்றி!(பல்சுவைப்பதிவுகள்)

Tuesday, June 21, 2011

அன்பின் அகம்



அன்பின் அகம் நிறைந்து....
ஆக்கம் அதில் தெளிந்து....
உண்மை உணர்வடைந்து....
உயர்வில் தெளிவடைய.....
நன்மை வேண்டும் இறையே....
நின்னை நாடும் பணியும் இதுவே.



தெளிவாக அடையட்டும் ஆண்டு
தேடும் பொருள் நிலை வேண்டும்
நாடும் நிதைதருள் வேண்டும்
நல்லவையே நடைபெற வேண்டும்....



ஏறி இருந்து செலுத்த நினைத்தாய் இயக்கம் இல்லை
அதன் இயந்திரத்தில் தானும் எப் பழுதுமில்லை
மாறி வந்து தற்றத்தள்ள....
அதன் மறுதலிப்பும் மாறிச் செல்ல....
மீறி வரும் இயக்கம் கண்டு
மீண்டும் ஏற நின்றால்
ஆறிப் போகும் - வுல்
இயந்திரத்தின் அர்த்தம்தான் என்ன?.

நன்றி!

Friday, June 10, 2011

11 ஆண்டுகளாக பிரிந்த நட்பு மீண்டும் மலர்ந்தது....

நட்பு என்றால் நான் உங்களுக்கு ஒன்றும் புதிதாக சொல்லவே தேவை இல்லை. என்னுடைய நட்பும் கர்ணன் நட்பு மாதிரி பெரிதானதல்ல.
அதுவும் பாடசாலையில் உருவாகும் நட்பு உலகில் எவராலும் மறக்கமுடியாது. அந்த வகையில் எனக்கும் பல நட்புகள் பாடசாலையில் மலர்ந்தது. ஆனாலும் 5ம் ஆண்டில் படிக்கும் போது ஒரு நண்பன் எனது நட்பு அகராதியில் இணைந்தான். இப்படியான நட்பு மேலும் வளர்ந்து கொண்டு சென்றது. இந்த நட்பை பார்த்த எனது சக மாணவர்கள் எங்கள் மீது பொறாமை கொள்ள ஆரம்பித்தார்கள்.

இப்படியான நிலையில் நட்பின் இலக்கணங்களாக விளங்கிய நாங்கள் ஓவ்வொரு வகுப்பு உயரும் போதும் இருவரும் பிரிவதில்லை இருவரும் அருகில் ஒன்றாக அமர்ந்துதான் படித்தோம்.இப்படி இருக்கையில் பொறாமையின் உச்சத்திற்கு போன எனது சக மாணவர்கள் எங்கள் இருவரையும் பிரிப்பதற்கு சதி வலைகளை பின்ன ஆரம்பித்தார்கள்.இதன் பின்னர் பின்னிய வலையில் எங்களை பிரித்தார்கள் இதை அறியாத நாங்களும் பிரிந்தோம்.

இதில் முக்கிய விடயம் என்னவென்றால் நான் தான் முதலில் அவனிடம் கதைப்பதை தவிர்த்தேன்.இதன் பின்னர் அவனும் என்னிடம் கதைப்பதை தவித்துக்கொண்டான். இப்படியாக நாங்கள் இந்தியா பாக்கிஸ்தான் நிலைமைக்கு சென்றோம்.இதை எல்லாம் பார்த்த எங்களுடைய சக மாணவர்கள் பிரித்து விட்டோம் என்று மகிழ்ச்சி அடைந்தாலும் இன்னொரு பக்கம் எங்களுடைய பிரிவு வேதனையை கொடுத்தது. இப்படியாக காலமும் நகர்ந்தது எங்களுடைய சக மாணவர்களும் இருவரையும் சேர்பதற்கு முயற்சி எடுக்கவில்லை. நானும் இமேஜ்(Image) காரணமாக அவனோடு கதைப்பதற்கு முயலவில்லை.இப்படியான நிலையில் எங்களை பிரித்த சக மாணவர்களில் ஒருவன் நடந்தவற்றை என்னிடம் கூறிய போதும் நான் அவனோடு கதைப்பதற்கு ஆயத்தம் இல்லாதவானாகாக காணப்பட்டேன்;. மேலும் சில ஆண்டுகளுக்கு பின் சாதாரண தர (O/L) பரீட்சை தோற்றிய பின்னர் நான் கணித பிரிவிலும் அவன் வர்த்தக பிரிவிலும் கல்வியை பயின்று பாடசாலையை விட்டு வெளியேறினோம். இதனால் மேலும் நட்பு பாலம் உடைந்த ஆறு போல் இருந்தது இதை திருத்துவதற்கு எனது சக மாணவர்களும் முன்வரவில்லை.இப்படியாக கால சக்கரமும் நகர்ந்தது கொண்ட சென்றது.

கிளைமாக்ஸ்(Climax)

இறுதியாக சில நாட்களுக்கு முன்பு எனது பாடசாலை வாழ்கையை நினைத்த போது இவனுடைய நட்பும் பிரிவும் எனது மெமரியில் லோட்(Load) ஆனது இதன் பின்னர் நான் சிந்தித்தேன் பிரிந்த நட்பை தொடவேண்டும் என்று ஆகையால் இவனை எங்காவது பார்த்தால் நான் முதலில் கதைக்க வேண்டும் நினைத்தேன் .இப்படியாக சில நாட்களுக்கு முன் என்னுடைய உறவினார் ஒருவரை அவன் சந்தித்திருக்கிறான். அவரும் என்னுடைய பாடசாலையில் படித்தவர் இதனால் அவர் என்னுடைய உறவினர் என்று அவனுக்கு தெரியும் ஆகையால் அவன் அவரிடம் எங்களுடைய நட்பு பிரிந்ததை பற்றி கூறியுள்ளான். இதை கேட்ட என்னுடைய உறவினார் உடனே தொலைபேசியில் தொடர்கொண்டு இப்படி நடந்ததா என கேட்டார் நானோ ஆம் என்று கூறியது மட்டுமல்லாது அவனை எங்கே சந்தித்தீர்கள் என்று வினவ அவனோ அருகில் இருக்கிறான் என்றார். நானே உடனே அவனிடம் தொலைபேசி கொடுங்கள் என்று கூற அவரோ கொடுக்க நாங்கள் இருவரும் மனம் விட்டு 5 நிமிடங்கள் வரை கதைத்தோம்.மேலும் அவனே என்னிடம் உன்னுடைய தொலைபேசி இலக்கத்தை உனது உறவினாரிடம் வாங்கி பின்னர் உன்னை தொடர் கொள்கிறேன்டா என்று கூறி விடைபெற்றான்.


இப்ப ஒரு உண்மையை சொல்கிறேன்....

"பிரிவுகள் வேண்டாம் பிரிவுகள் வேண்டாம் பிரிவுகள் வேண்டாம் அதுவும் நட்பின் பிரிவு வேண்டாம் சாமியோ" இந்த உலகில்....(நண்பேன்டா!)

நன்றி!(பல்சுவைதிவுகள்)

Sunday, May 22, 2011

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கருத்துமிக்க கதை.

மனித வாழ்கையை பலர் பேர் பல மாதிரியான தத்துவங்களை வாரி இறைத்தாலும் நமது அனுபவத்தில் சிம்பு வானம் படத்தில் சொல்வது போன்று என்ன வாழ்க்கடா இது என்பது சில சந்தர்ப்ப சூழ் நிலைகளில் இந்த வார்த்தையை நினைப்தை நமக்கு கூட தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் என்னுடைய சொந்த வாழ்கையிலும் பல சந்தர்பங்களில் தோல்வியை சந்தித்த போதல்லாம் இந்த வார்த்தையை நினைத்தேன்.
இப்ப எதாவது பஞ்ச் சொல்லனும் போல தோன்றியது அதுதான் சும்மா! அவ் அவ்......
அதுமட்டுமல்ல நமது மானிட யாதார்த்த வாழ்கையில் பல சரிவு எற்படுவது சீரானது தான் ஆனாலும் இந்த சரிவுகளை நிமிர்த்திக் கொண்டு வாழ்வதுதான் மனித வாழ்கையும் கூட என்ன? மேலும் நமது வாழ்கையில் பிறரின் தலையீடு, விசனங்கள் என பல சாக்கடைகளை கடக்க வேண்டியும் கூட அமைகிறது. ஆனாலும் இந்த தலையீடு, விசனங்கள என்பவற்றை பற்றி சினம் அடையாமல் அதை உள்வாங்காமல் நமது வாழ்கை பயணத்தை தொடர்வது சரியான தெரிவு. சரி தானே நான் சொன்னது நீங்க என்ன நினைக்கிறீர்கள் இதைப்பற்றி? மேலும் படிங்க.
பிறரது சொல்பேச்சு கேளாமை பற்றி ஒரு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கதையை உங்களுக்கு சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். யார் முதலில் மலை உச்சியைத் தொடுவது என்று தவளைகளுக்குள் ஒரு போட்டி. எல்லா தவளைகளும் ஓரே மாதிரியாகத் தான் கத்திக் கொண்டிருந்தன அது என்னவென்றால் முடியாது என்றுதான். இந்தக் கூச்சலுக்கு நடுவே ஓரே ஓரு தவளை மட்டும் மலை உச்சியை அடைந்ததுவிட்டது.(மிகவும் சுறுசுறுப்பான தவளை போல)
எப்படி இந்தத் தவளையால் மட்டும் சாதிக்க முடிந்தது? அது செவிட்டுத் தவளையாம். எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பேச்சுக்களை கேட்காதே என்று சூப்பர்ஸ்டார் கூறினாராம். எப்படியான கருத்துமிக்க கதை என்று பார்த்திர்களா! அதுமட்டுமல்ல எனக்கு கூட இந்த கதை உற்சாகம் ஊட்டியதாக அமைந்தது. பிறரது சொல்பேச்சு கேளாமையினால் எப்படியான பலன் கிடைக்கிறது பார்த்தீர்களா!
மேலும் நமது வாழ்கையில் தன்னம்பிகை விடாமுயற்சி கடின உழைப்பு என்பனவற்றால் நமக்கு வெற்றி சேரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்பதோடு இந்த பாடலையும் பார்த்துவிட்டு ஏதாவது கருத்து சொல்ல விரும்பினால் சொல்லிட்டு போங்க சாமியோவ். 
 
 

நன்றி!(பல்சுவைப் பதிவுகள்...........

Sunday, May 1, 2011

புதுயுகத் தமிழர் கவிதையின் தொடர்ச்சி....


ஈழத் தமிழர் குரல் எங்கெங்கோ ஒலிக்கின்றது....
இவர்களல்லோ தமிழர் என்று எண்திசையும் பறைகின்றது....
வாழத் தெரிந்தவர்கள் தாம் வாழந்த இடம் வேண்டி....
சாலத்தின் முன் கண்ட கலிங்கத்துப் பரணியும்
இப் போர்ண்டு கவிதனில் நலிந்து போகுமோ?....
ஞாலத்தின் முன் வந்து நயம் பெறும் - நம்
தமிழர் பலம் வளம் பெறும் புதுயுகத்தில்!
சர்வதேச வலைப்பின்னலின் தமிழ்ப் பணி....
தரம் கொண்ட தமிழினி 'மஞ்சரி தலை' இலண்டனில் புத்ததாளி
கலைமண உதையன் பத்திரிகை கனடாவில் நிறைவொளி....
கவித்துவ நிறைவோடு கலாச்சார தமிழ் பணி
இலக்கிய யுகத்தில் இத்தனை வளர்வுகள்....
இதற்கு ஏற்றாற்போல் எத்தனை வரைவுகள்
அழகிய தமிழில் சுவிஸில் தமிழ்ப்பணி....
அடக்கமாய் சதிஸின் ஆக்கங்கள் புதுயுகத்தில்....

புதுயுகத்தில் தமிழர் இவர்கள் பொலிவுடன் வளம் பெறுவர்!
நவயுக வளர்விற்கேற்ப நாமும் உயரல் வேண்டும்!
கலையுகப் பணி செய்த கவித்தமிழ் வளர வேண்டும!
கருத்துடன் படத்துறையில் கைங்காரியம் செய்ய வேண்டும!
எத்துறை எதிலும் எம் தமிழர் உயர வேண்டும்!
ஏற்றம் கண்டு தமிழர் இனம் தனிக்கொற்றம் கொள்ளல் வேண்டும்!
பற்துறைப் பாவலர்கள் என்று எமைப் பலரும் பாராட்ட வேண்டும்!
பாரினிலே பழமை இனம் புதுயுகத்தில் பளிச்சிட வேண்டும்!

புதுயுக தமிழன இவன் புறப்பட்டு விட்டான்....
போன இடம் தன்னில் தலைப்பட்டு விட்டான்....
நவயுகத் தகுதியை நன்றாய் அடைந்து அடைந்து விட்டான்....
நல்லார் இவர்கள் எனறு நாவுடையார் போற்றல் பெற்றான்....
சொல்லால் செயலில் சோர்வை ஒதுக்கி வைத்தான்....
சுகந்திரத்தை வேண்டி சொந்தத்தில் நாடு கொள்வான்!
இந் நாள் எவையும் இனி இனிதே எனதேன்பேன்
பொன்னாயு ஒளி பெற்று புதுயுகத்தில் உயர் பெறுவான்!
வாயுடையார்க்கெல்லாம் பொய்த மொழி தமிழ்
சேயுடையார் வீட்டில் செழித்து விட்டான்....
நாவுடை நாவவல் கண்ணதாசன் நல் ஆய்வுடன்
ஆக்கம் சொன்னான்....
கேட்டீர் நம் வாய்மை
ஆற்றிடுவீர் நல் சேவை
அது ஆற்றுப் படுத்தும் புது யுகத்தில் தமிழரை....


நன்றி!

படைப்பு : எனது தந்தை

Wednesday, April 27, 2011

பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபா மஹா சமாதி அடைந்தமைக்கு இரங்கல் பா!


வானுறைந்த தெய்வமொன்று வையத்துள் வந்தது....
வாழ்வாங்கு வாழ்ந்து காட்டி வானுறையச் சென்றதோ....
தானிளைத்து தன்ளாடியும் தார்மீகம் செய்தது....
தயவுடன் தாட்சண்ணியத்தை தாராளமாகத் தந்தது
யார் மதமும் ஓர் மதமே யாமெல்லாம் ஓரினமே....
பாரறிய உலகிற்கு பன்மைத்துவ வாதம் தந்த
யாமறிந்த புனிதர் இவர் யாவர்க்கும் பொது உடையார்....
போய் அறிந்த சேதி கேட்டு புவனமே கலங்குது இன்று!


புனிதர் எனப் போற்றப்பட்டார் போய்விட்டார்.....
போக்கிஸமாய் இருந்தவர் இன்று சென்று விட்டார்
மனிதர் என மதிக்கப்பட்டார் மறைந்து விட்டார்....
மகானாக வாழ்ந்தவர் மாற்றம் கொண்டார்
இனிதே என இயம்பியவர் எம உலகம் கண்டார்....
இயன்றவரை இறை உள்ளம் காட்டி இறைபதம் சேர்ந்தார்
நமதே என்று சொன்னவர் நமை விட்டகன்றார்
நலமிழந்து உலகம் இன்று நாதியற்றுத் தவிக்கிறது....


பிறப்பு : - 23-11-1926
மாகசமாதி : - 24-04-2011
பிறந்த இடம்: - புட்டபர்த்தி
இறந்த இடம்: - புட்டபர்த்தி
இயற்பெயர் : - சத்தியநாராயணராஜீ
தத்துவம் : - அத்வைதம்
குரு : - எவருமில்லை


அன்பாலும் தன்னிகரமற்ற சேவையாலும் உலகம் முழுவதையும் தன்வசப்படுத்திய பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபா மஹா சமாதி அடைந்தமைக்கு அவருடையபக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை பல்சுவைப்பதிவு ஊடாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபாவின் சில பொன் மொழிகள்....

  • அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள்.உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.
  • மனதை தூய்மையாக முழுமையாக வைத்துக்கொள். வெற்றிபெறுவாய்
  • சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.தயாராக இருக்கும் மொட்டுகளதான்; மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
  • உண்மை, தர்மம், கருணை ,மன்னிக்கும் மனப்பான்மை , இவற்றை பெற வேண்டுமானால் ஓவ்வொரு தனி மனிதனும் தனக்குள் அவற்றை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபாவின் ஆன்மீகத் தத்துவம்....
  • கடவுள் ஒருவர்தான்.அவர் தான் அனைத்து மதங்களின் காரணகர்த்தா.
  • என்னிடம் வர மதம் தேவையில்லை.
  • உங்களின் மதங்களிலேயே இருந்தபடி என்னைப் பின்பற்றுங்கள் மற்றும் மக்களுக்கு தொண்டு செய்யுங்கள்.
  • உங்கள் சேவைதான்,மரணத்துக்குப் பிறகும் உங்களை உன்னத இடத்தில் வைக்கும் என்பதை நம்புங்கள்.

நான் இறந்தாலும்,மறுபிறப்பு எடுப்பேன் என்பது பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபாவின் முந்தைய அறிவிப்பு ஆகும். இதனால் அவருடைய பக்தர்கள் மற்றும் சீடர்களின் ஒரே எதிர்பார்ப்பாய் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என்றால் அது மிகையான விடயமல்ல.

நன்றி!




Saturday, April 23, 2011

புதுயுகத் தமிழர்

புலம்பெயர்ந்த தமிழர் எங்கும் பொங்குதமிழ் கீதம்....
புத்தெழுச்சி பெற்று அவர்கள் புதுத்தென்பில் கோஸம்....
மறவர் படை தமிழரென வஞ்சினமாய் நாதம்....
வரப்போகும் தமிழ் நிலத்தை வரவேற்று நேசம்....
அறிவுடனாய் ஆக்கம் செய்து அகிலமெங்கும் ஈட்டம்....
ஆகமட்டும் சேர்ந்த இடத்தில் அன்பதனாய் தோட்டம்....
அவர்கள் அடுத்தடுத்து முயற்சி தமிழ் வளர்க்கும் பாசம்....
அத்தனையும் அவர்கள் தம் புதுயுகப் பிரவேசம்!

பண்பாட்டை பறைசாற்றி தமிழர் பக்குவத்தை வெளிக்காட்டி....
பாரம்பரிய தமிழர் இனம் பரிணாமம் கண்டு விட்டது
பலவளர்ச்சி கண்டு பல்துறையில் நிறைவு கண்டு....
தொழிற்துறையில் தமிழர் இனம் துறை கண்டது
துவளாமல் பல வழியில் வெற்றி கொண்டது....
நிகழ்கால வரவை நோக்கி நிமிர்ந்து நிற்கும்
நீடித்து நிலைத்து நிற்க உழைத்து நிற்குது....
வருங்கால யுகத்தை நோக்கி வாஞ்சை கொள்ளுது
வரும் புதுக்கால யுகத்தை நோக்கி வரிந்து நிற்கும்!

ஜதீகப்புராணங்கள் அதிகளவில் ஆக்கிய இனம்....
வெளகித யதார்த்தத்தில் நலம் பெற வளர்ந்த இனம்
வைதீக கலாச்சாரத்தை வரும்பு மீறிக் கொள்ளாமல்....
பௌதீக இரசாயனத்தில் பாரிய வளர்ப்பு கண்டு
பலப்பல ஆக்கங்களை பாருக்குத் தருகின்றனர்....
கணனியில் மென் பொருளை கற்றதில் பெரும்பாலோர்
அறிவுடை தமிழர் என்றால் வியப்பாகுமா?
அத்தனையும் அவர்கள் தம் யுகப்பிரவேசம்.

பிரான்ஸ் நகரசபையில் தமிழர்!
பெரிய பிரித்தானியாவில் நாடாளுமன்ற அபேட்சகர்!
அமெரிக்காவில் அரசசபை அங்கத்துவம்!
அவுஸ்திரேயாவில் அதற்கான பிரவேசம்!
கனடாவில் ராஜரிக அந்தஸ்து! கடல் கடந்து
மறு தேசங்களிலும் கற்றவருள் தமிழர்!
டொறண்டோவில் தமிழர் கூட்டம்!
தொலை தூரம் எனினும் துவளாத தமிழ் நேசம்!
அகலாத தமிழ் பாசம் அத்தனையும் அதிவேக
யுகத்திற்கான அத்திவாரம்!

புதுயுகத் பாதையில் புதுபொலிவு தமிழர் அணி....
பொக்கிஷ தமிழ் நூல்கள் புது வடிவில் இணையத்தில்
புதிய விசைப் பலகை தமிழில் கணனியில்....
புத்தொளியில் தமிழுக்கு தனியான தமிழ் இணையம்
வதிய இடம் வேண்டி வாழச்சென்ற இடம் தன்னில்....
நிறைய ஆக்கம் செய்து நிலைத்து விட்டான் எம் தமிழர்
வரையே இல்லாமல் வளர்ந்திடுவார் இவ் இனத்தார்
வழிசமைத்து புதுயுகத்தை வாழ்வமைப்பார் இத் தமிழர்!


தொடரும்....


இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...