Sunday, July 1, 2012

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர் வழக்கம். அந்த வகையில் நம்ம இளைஞர்களுக்கு 25,26 வயது வந்தவுடன் கல்யாண ஆசை வந்துவிடும். இது ஒன்றும் புது விடயம் இல்லாவிடினும் இயற்கையும் அதுதானே. இதை இப்படியும் ஒருவர் சந்திக்கிறார். அதற்காக இப்படியும் ஒரு உதாரணம் சொல்லாலமா?

கல்யாணம்
இம்ரான்: எண்ட நண்பன் ஹாசனுக்கு வரும் சனிக்கிழமை கல்யாணம் உம்மா. நீயும் இருக்கிறாயே எண்ட கல்யாணம் பத்தி யோசித்தாயா?

உம்மா: ஆமாம் இது ஒன்றுதான் குறைச்சல் நீ கெட்ட கேட்டுக்கு  அவன் ஹாசன் அவண்ட வாப்பாவின்ட தொழிலை பார்க்கிறான் நீயும் இருக்கிறாயே!


(இப்படியாக இம்ரானின் வாப்பா மதியம் கடையிருந்து பள்ளிக்குச் சென்ற்று விட்டு வீட்டுக்கு வந்தவுடன் இம்ரானின் உம்மா அவருக்கு மதிய உணவை பரிமாறிக்கொண்டே.....)


இம்ரானின் உம்மா: உங்க மகன் இம்ரான்,அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்குமாறு என்னை தொந்தரவு பாடுத்துகிறான்.

                                     
இம்ரானின் வாப்பா: அப்படியா? நான் பார்கிறேன்.

இப்படியாக  இம்ரானின் வாப்பா மதியம் சாப்பிட்டு வெளியில் வரும் வேளை.

இம்ரானின் வாப்பா: இம்ரான் இங்க வா. நான் காலை பார்த்தேன் நம்ம கிணற்றடியில் இருக்கிற பப்பாசி மரத்தில பழம் ஒன்று  பழுத்திருந்தது. அதை உடனே பறித்துக்  கொண்டு வா!

இம்ரான்: பழத்தை பறித்து வாப்பாவின் அருகே வருகிறான்.

இம்ரானின் வாப்பா: மகன் இம்ரான் இந்த பழத்தின் இருக்கும் கொட்டையை
ஒருக்கா எண்ணிச் சொல்லுடா? பார்ப்போம்.

இம்ரான்: இது என்ன வாப்பா 200,300 கொட்டைகள் இருக்கும். இதை எப்படி எண்ணுவது?

இம்ரானின் வாப்பா: இம்ரான் இதில் 200,300 கொட்டைகள் இருக்கும் என்று எடுப்போம். சரி இங்க பாருங்க இம்ரான் இந்த பப்பாசிப் பழமே 200,300 கொட்டைகளைவைத்துக்கொண்டு சும்மா இருக்கிறது. ஆனால்  நீங்கலோ டேஸ் டேஸ் வைத்துக் கொண்டு  என்ன பாடு பாடுகிறீர்கள்.  உங்க  ப்ரெண்ட் ஹாசன் சொந்தமாக தொழில்  செய்கின்றான். நீங்க இன்னும் வெட்டி ஆபிசறாகத்தானே இருக்கீங்க?  முதலில் சொந்தமாக ஒரு தொழில் பண்ணுங்க,வாப்பா பணம் தருகிறேன். அதன் பிறகு   கல்யாணத்தைப் பற்றி யோசிக்கலாம்.

(விளையாட்டா உம்மாகிட்ட சொன்னது, ஒரு தொழில் பண்ண வாய்ப்பை ஏற்படுத்தியதை நினைத்து மகிழ்ச்சியில் திளைக்கத்தொடங்கினான் இம்ரான்.)


    


















Tuesday, April 17, 2012

சந்தோசம் + தானம்(நகைச்சுவை) = சந்தானாமா?

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்திலிருந்து எனக்கு பிடித்த சில நகைச்சுவையான வசனங்களை பகிர்ந்துருக்கிறேன்.


எப்பிடி
 1.நான் முதன் முதலா எட்டாவது படிச்சப்ப ஒரு பொண்ணை டாவட்ச்சேன்.ஃ அதுதான் ஒரிஜினல் லவ் இதெல்லாம் சும்மா பிராஜட் மாதிரிடா மச்சான். 


2.கேக்கிறவன் கேனையனா.. கேரம்போர்ட கண்டு பிடிச்சது கே.எஸ்.ரவிக்குமாரு சொல்வியா?


3.ஏன் இந்த காவி டிரஸ்?
காதல்ல தோத்தவன் காவி டிரஸ் போடாமஇ பின்ன நேவி டிரஸ்ஸா போடுவான்?
 


4.டேய் ஆணவத்தில ஆடாதடா. ராணுவத்தில அழிஞ்சவங்கள விட ஆணவத்தில அழிஞ்சவங்கத்தான் அதிகம்.


5.FACT..FACT..FACT.. இந்தப் பொண்ணுங்க ஒருநாளைக்கு பத்து பேருக்கு ஓகே சொன்னா.. பத்தாயிரம் பேரை கழட்டி விடுறாங்க.



தீர்க்க சுமங்களன் பவ!


6.நீ கரக்ட் பண்ற பொண்ண விட உன்ன கரக்ட் பண்ணுற பொண்ணுதான் ஒர்க் அவுட் ஆகும் . 


7.டேய்... சினேகாடா... புன்னகை அரசிடா...!
நான் என்ன... புழுங்கல் அரிசின்னா சொன்னேன்.
 


8.பொண்ணுங்களோட ரத்தமும் சிவப்பு.பையன்களோட ரத்தமும் சிவப்பு.அப்பறம் ஏன் பொண்ணுங்களோட எண்ணம் மட்டும் கருப்பா இருக்கு.?
 

9.டேய்... நான் மொடாக் குடிகாரனுவ கூட சேர்ந்துக் குடிப்பேன். ஆனா மோந்துப் பாக்குறவன் கூடெல்லாம் குடிக்க மாட்டேன்.


10.ஏரி உடைஞ்சா மீனு ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்.


11. தண்ணியடிக்கிற பழக்கம் என்பது தலையில வர்ற வெள்ள முடி மாதிரி.. ஒன்னு வந்துட்டா போதும். ஜாஸ்தியா ஆகுமேத் தவிர கம்மி ஆகவே ஆகாது.


12.அயன் பன்றவங்க அழக் கூடாது.


என்ன தத்துவம் Super....சந்தானம் சந்தோசம் தான்....

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...