Sunday, May 22, 2011

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கருத்துமிக்க கதை.

மனித வாழ்கையை பலர் பேர் பல மாதிரியான தத்துவங்களை வாரி இறைத்தாலும் நமது அனுபவத்தில் சிம்பு வானம் படத்தில் சொல்வது போன்று என்ன வாழ்க்கடா இது என்பது சில சந்தர்ப்ப சூழ் நிலைகளில் இந்த வார்த்தையை நினைப்தை நமக்கு கூட தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் என்னுடைய சொந்த வாழ்கையிலும் பல சந்தர்பங்களில் தோல்வியை சந்தித்த போதல்லாம் இந்த வார்த்தையை நினைத்தேன்.
இப்ப எதாவது பஞ்ச் சொல்லனும் போல தோன்றியது அதுதான் சும்மா! அவ் அவ்......
அதுமட்டுமல்ல நமது மானிட யாதார்த்த வாழ்கையில் பல சரிவு எற்படுவது சீரானது தான் ஆனாலும் இந்த சரிவுகளை நிமிர்த்திக் கொண்டு வாழ்வதுதான் மனித வாழ்கையும் கூட என்ன? மேலும் நமது வாழ்கையில் பிறரின் தலையீடு, விசனங்கள் என பல சாக்கடைகளை கடக்க வேண்டியும் கூட அமைகிறது. ஆனாலும் இந்த தலையீடு, விசனங்கள என்பவற்றை பற்றி சினம் அடையாமல் அதை உள்வாங்காமல் நமது வாழ்கை பயணத்தை தொடர்வது சரியான தெரிவு. சரி தானே நான் சொன்னது நீங்க என்ன நினைக்கிறீர்கள் இதைப்பற்றி? மேலும் படிங்க.
பிறரது சொல்பேச்சு கேளாமை பற்றி ஒரு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கதையை உங்களுக்கு சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். யார் முதலில் மலை உச்சியைத் தொடுவது என்று தவளைகளுக்குள் ஒரு போட்டி. எல்லா தவளைகளும் ஓரே மாதிரியாகத் தான் கத்திக் கொண்டிருந்தன அது என்னவென்றால் முடியாது என்றுதான். இந்தக் கூச்சலுக்கு நடுவே ஓரே ஓரு தவளை மட்டும் மலை உச்சியை அடைந்ததுவிட்டது.(மிகவும் சுறுசுறுப்பான தவளை போல)
எப்படி இந்தத் தவளையால் மட்டும் சாதிக்க முடிந்தது? அது செவிட்டுத் தவளையாம். எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பேச்சுக்களை கேட்காதே என்று சூப்பர்ஸ்டார் கூறினாராம். எப்படியான கருத்துமிக்க கதை என்று பார்த்திர்களா! அதுமட்டுமல்ல எனக்கு கூட இந்த கதை உற்சாகம் ஊட்டியதாக அமைந்தது. பிறரது சொல்பேச்சு கேளாமையினால் எப்படியான பலன் கிடைக்கிறது பார்த்தீர்களா!
மேலும் நமது வாழ்கையில் தன்னம்பிகை விடாமுயற்சி கடின உழைப்பு என்பனவற்றால் நமக்கு வெற்றி சேரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்பதோடு இந்த பாடலையும் பார்த்துவிட்டு ஏதாவது கருத்து சொல்ல விரும்பினால் சொல்லிட்டு போங்க சாமியோவ். 
 
 

நன்றி!(பல்சுவைப் பதிவுகள்...........

Sunday, May 1, 2011

புதுயுகத் தமிழர் கவிதையின் தொடர்ச்சி....


ஈழத் தமிழர் குரல் எங்கெங்கோ ஒலிக்கின்றது....
இவர்களல்லோ தமிழர் என்று எண்திசையும் பறைகின்றது....
வாழத் தெரிந்தவர்கள் தாம் வாழந்த இடம் வேண்டி....
சாலத்தின் முன் கண்ட கலிங்கத்துப் பரணியும்
இப் போர்ண்டு கவிதனில் நலிந்து போகுமோ?....
ஞாலத்தின் முன் வந்து நயம் பெறும் - நம்
தமிழர் பலம் வளம் பெறும் புதுயுகத்தில்!
சர்வதேச வலைப்பின்னலின் தமிழ்ப் பணி....
தரம் கொண்ட தமிழினி 'மஞ்சரி தலை' இலண்டனில் புத்ததாளி
கலைமண உதையன் பத்திரிகை கனடாவில் நிறைவொளி....
கவித்துவ நிறைவோடு கலாச்சார தமிழ் பணி
இலக்கிய யுகத்தில் இத்தனை வளர்வுகள்....
இதற்கு ஏற்றாற்போல் எத்தனை வரைவுகள்
அழகிய தமிழில் சுவிஸில் தமிழ்ப்பணி....
அடக்கமாய் சதிஸின் ஆக்கங்கள் புதுயுகத்தில்....

புதுயுகத்தில் தமிழர் இவர்கள் பொலிவுடன் வளம் பெறுவர்!
நவயுக வளர்விற்கேற்ப நாமும் உயரல் வேண்டும்!
கலையுகப் பணி செய்த கவித்தமிழ் வளர வேண்டும!
கருத்துடன் படத்துறையில் கைங்காரியம் செய்ய வேண்டும!
எத்துறை எதிலும் எம் தமிழர் உயர வேண்டும்!
ஏற்றம் கண்டு தமிழர் இனம் தனிக்கொற்றம் கொள்ளல் வேண்டும்!
பற்துறைப் பாவலர்கள் என்று எமைப் பலரும் பாராட்ட வேண்டும்!
பாரினிலே பழமை இனம் புதுயுகத்தில் பளிச்சிட வேண்டும்!

புதுயுக தமிழன இவன் புறப்பட்டு விட்டான்....
போன இடம் தன்னில் தலைப்பட்டு விட்டான்....
நவயுகத் தகுதியை நன்றாய் அடைந்து அடைந்து விட்டான்....
நல்லார் இவர்கள் எனறு நாவுடையார் போற்றல் பெற்றான்....
சொல்லால் செயலில் சோர்வை ஒதுக்கி வைத்தான்....
சுகந்திரத்தை வேண்டி சொந்தத்தில் நாடு கொள்வான்!
இந் நாள் எவையும் இனி இனிதே எனதேன்பேன்
பொன்னாயு ஒளி பெற்று புதுயுகத்தில் உயர் பெறுவான்!
வாயுடையார்க்கெல்லாம் பொய்த மொழி தமிழ்
சேயுடையார் வீட்டில் செழித்து விட்டான்....
நாவுடை நாவவல் கண்ணதாசன் நல் ஆய்வுடன்
ஆக்கம் சொன்னான்....
கேட்டீர் நம் வாய்மை
ஆற்றிடுவீர் நல் சேவை
அது ஆற்றுப் படுத்தும் புது யுகத்தில் தமிழரை....


நன்றி!

படைப்பு : எனது தந்தை

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...