Friday, June 24, 2011

நிம்மதி எங்கே என்று தேடிப்பார்த்தேன் அது எங்கேயும் இல்லை....

முந்தைய மாதிரி லைப்பில இப்ப நிம்மதி என்ற சொல்லுக்கே இடமில்ல. எத தொட்டாலும் பிரச்சனை தலை பிய்க்கிறது. ஏன் வீடு, வேலை செய்யும் இடத்தில் கூட இப்படி நிம்மதியை தேட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுக்கிறோம் என்றால் அது பொய்யல்ல. இப்படியான நிலையில் இருக்கையில் எனது நண்பர் ஒருவர் பேஸ்புக்கில்(Facebook) நிம்மதியை பற்றிய கதையை பிரசுரித்த போது இது எனக்கு பிடித்திருந்தது. ஆகையால் இந்த கதையை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன் வாசர்களே!


நிம்மதி இழப்பது எதனால்? Good Question(இது நல்ல கேள்வி)
ஒரு துறவி இருந்தார்.அவரிடம் பணக்காரர் ஒருவர் வந்தார்.சுவாமி என்னிடம் நிறைய செல்வமிருந்தும் நிம்மதி இல்லை. என்ன காரணம் என்பது புரியவில்லை?என்று கேட்டார். அதற்கு துறவி பதில் சொல்லவில்லை.
அங்கே விளையாடிகொண்டிருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.அதன் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார். குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக்கொண்டது. அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார். அதையும் இன்னொரு கையால் வாங்கிக்கொண்டது. மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார். தன்னுடைய ஒருகையால் இருபழங்களையும் மார்போடு அணைத்துக்கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது. ஆனால் ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது. அதைக்கண்டு அந்த குழந்தை அழுதது .இதை கவனித்துக் கொண்டிருந்த அந்த பணக்காரரிடம் அந்த துறவி 'இந்த குழந்தையை பார்த்தாயா? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?' அதே போன்றுதான் 'போதும்' என்ற திருப்தி ஏற்பட்டுவிட்டால் பிரச்சனை வாரது. நிம்மதி கிடைக்கும். பணக்காரருக்கு தனக்கு ஏன் நிம்மதி இல்லை என்ற விவரம் புரிந்துவிட்டது.




உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு!!!!! இந்த வரியைக் கேட்கும் போது மனம் நெகிழ்கின்றது....
 
நன்றி!(பல்சுவைப்பதிவுகள்)

Tuesday, June 21, 2011

அன்பின் அகம்



அன்பின் அகம் நிறைந்து....
ஆக்கம் அதில் தெளிந்து....
உண்மை உணர்வடைந்து....
உயர்வில் தெளிவடைய.....
நன்மை வேண்டும் இறையே....
நின்னை நாடும் பணியும் இதுவே.



தெளிவாக அடையட்டும் ஆண்டு
தேடும் பொருள் நிலை வேண்டும்
நாடும் நிதைதருள் வேண்டும்
நல்லவையே நடைபெற வேண்டும்....



ஏறி இருந்து செலுத்த நினைத்தாய் இயக்கம் இல்லை
அதன் இயந்திரத்தில் தானும் எப் பழுதுமில்லை
மாறி வந்து தற்றத்தள்ள....
அதன் மறுதலிப்பும் மாறிச் செல்ல....
மீறி வரும் இயக்கம் கண்டு
மீண்டும் ஏற நின்றால்
ஆறிப் போகும் - வுல்
இயந்திரத்தின் அர்த்தம்தான் என்ன?.

நன்றி!

Friday, June 10, 2011

11 ஆண்டுகளாக பிரிந்த நட்பு மீண்டும் மலர்ந்தது....

நட்பு என்றால் நான் உங்களுக்கு ஒன்றும் புதிதாக சொல்லவே தேவை இல்லை. என்னுடைய நட்பும் கர்ணன் நட்பு மாதிரி பெரிதானதல்ல.
அதுவும் பாடசாலையில் உருவாகும் நட்பு உலகில் எவராலும் மறக்கமுடியாது. அந்த வகையில் எனக்கும் பல நட்புகள் பாடசாலையில் மலர்ந்தது. ஆனாலும் 5ம் ஆண்டில் படிக்கும் போது ஒரு நண்பன் எனது நட்பு அகராதியில் இணைந்தான். இப்படியான நட்பு மேலும் வளர்ந்து கொண்டு சென்றது. இந்த நட்பை பார்த்த எனது சக மாணவர்கள் எங்கள் மீது பொறாமை கொள்ள ஆரம்பித்தார்கள்.

இப்படியான நிலையில் நட்பின் இலக்கணங்களாக விளங்கிய நாங்கள் ஓவ்வொரு வகுப்பு உயரும் போதும் இருவரும் பிரிவதில்லை இருவரும் அருகில் ஒன்றாக அமர்ந்துதான் படித்தோம்.இப்படி இருக்கையில் பொறாமையின் உச்சத்திற்கு போன எனது சக மாணவர்கள் எங்கள் இருவரையும் பிரிப்பதற்கு சதி வலைகளை பின்ன ஆரம்பித்தார்கள்.இதன் பின்னர் பின்னிய வலையில் எங்களை பிரித்தார்கள் இதை அறியாத நாங்களும் பிரிந்தோம்.

இதில் முக்கிய விடயம் என்னவென்றால் நான் தான் முதலில் அவனிடம் கதைப்பதை தவிர்த்தேன்.இதன் பின்னர் அவனும் என்னிடம் கதைப்பதை தவித்துக்கொண்டான். இப்படியாக நாங்கள் இந்தியா பாக்கிஸ்தான் நிலைமைக்கு சென்றோம்.இதை எல்லாம் பார்த்த எங்களுடைய சக மாணவர்கள் பிரித்து விட்டோம் என்று மகிழ்ச்சி அடைந்தாலும் இன்னொரு பக்கம் எங்களுடைய பிரிவு வேதனையை கொடுத்தது. இப்படியாக காலமும் நகர்ந்தது எங்களுடைய சக மாணவர்களும் இருவரையும் சேர்பதற்கு முயற்சி எடுக்கவில்லை. நானும் இமேஜ்(Image) காரணமாக அவனோடு கதைப்பதற்கு முயலவில்லை.இப்படியான நிலையில் எங்களை பிரித்த சக மாணவர்களில் ஒருவன் நடந்தவற்றை என்னிடம் கூறிய போதும் நான் அவனோடு கதைப்பதற்கு ஆயத்தம் இல்லாதவானாகாக காணப்பட்டேன்;. மேலும் சில ஆண்டுகளுக்கு பின் சாதாரண தர (O/L) பரீட்சை தோற்றிய பின்னர் நான் கணித பிரிவிலும் அவன் வர்த்தக பிரிவிலும் கல்வியை பயின்று பாடசாலையை விட்டு வெளியேறினோம். இதனால் மேலும் நட்பு பாலம் உடைந்த ஆறு போல் இருந்தது இதை திருத்துவதற்கு எனது சக மாணவர்களும் முன்வரவில்லை.இப்படியாக கால சக்கரமும் நகர்ந்தது கொண்ட சென்றது.

கிளைமாக்ஸ்(Climax)

இறுதியாக சில நாட்களுக்கு முன்பு எனது பாடசாலை வாழ்கையை நினைத்த போது இவனுடைய நட்பும் பிரிவும் எனது மெமரியில் லோட்(Load) ஆனது இதன் பின்னர் நான் சிந்தித்தேன் பிரிந்த நட்பை தொடவேண்டும் என்று ஆகையால் இவனை எங்காவது பார்த்தால் நான் முதலில் கதைக்க வேண்டும் நினைத்தேன் .இப்படியாக சில நாட்களுக்கு முன் என்னுடைய உறவினார் ஒருவரை அவன் சந்தித்திருக்கிறான். அவரும் என்னுடைய பாடசாலையில் படித்தவர் இதனால் அவர் என்னுடைய உறவினர் என்று அவனுக்கு தெரியும் ஆகையால் அவன் அவரிடம் எங்களுடைய நட்பு பிரிந்ததை பற்றி கூறியுள்ளான். இதை கேட்ட என்னுடைய உறவினார் உடனே தொலைபேசியில் தொடர்கொண்டு இப்படி நடந்ததா என கேட்டார் நானோ ஆம் என்று கூறியது மட்டுமல்லாது அவனை எங்கே சந்தித்தீர்கள் என்று வினவ அவனோ அருகில் இருக்கிறான் என்றார். நானே உடனே அவனிடம் தொலைபேசி கொடுங்கள் என்று கூற அவரோ கொடுக்க நாங்கள் இருவரும் மனம் விட்டு 5 நிமிடங்கள் வரை கதைத்தோம்.மேலும் அவனே என்னிடம் உன்னுடைய தொலைபேசி இலக்கத்தை உனது உறவினாரிடம் வாங்கி பின்னர் உன்னை தொடர் கொள்கிறேன்டா என்று கூறி விடைபெற்றான்.


இப்ப ஒரு உண்மையை சொல்கிறேன்....

"பிரிவுகள் வேண்டாம் பிரிவுகள் வேண்டாம் பிரிவுகள் வேண்டாம் அதுவும் நட்பின் பிரிவு வேண்டாம் சாமியோ" இந்த உலகில்....(நண்பேன்டா!)

நன்றி!(பல்சுவைதிவுகள்)

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...