முந்தைய மாதிரி லைப்பில இப்ப நிம்மதி என்ற சொல்லுக்கே இடமில்ல. எத தொட்டாலும் பிரச்சனை தலை பிய்க்கிறது. ஏன் வீடு, வேலை செய்யும் இடத்தில் கூட இப்படி நிம்மதியை தேட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுக்கிறோம் என்றால் அது பொய்யல்ல. இப்படியான நிலையில் இருக்கையில் எனது நண்பர் ஒருவர் பேஸ்புக்கில்(Facebook) நிம்மதியை பற்றிய கதையை பிரசுரித்த போது இது எனக்கு பிடித்திருந்தது. ஆகையால் இந்த கதையை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன் வாசர்களே!
நிம்மதி இழப்பது எதனால்? Good Question(இது நல்ல கேள்வி)
ஒரு துறவி இருந்தார்.அவரிடம் பணக்காரர் ஒருவர் வந்தார்.சுவாமி என்னிடம் நிறைய செல்வமிருந்தும் நிம்மதி இல்லை. என்ன காரணம் என்பது புரியவில்லை?என்று கேட்டார். அதற்கு துறவி பதில் சொல்லவில்லை.
அங்கே விளையாடிகொண்டிருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.அதன் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார். குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக்கொண்டது.
அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார். அதையும் இன்னொரு கையால் வாங்கிக்கொண்டது. மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார். தன்னுடைய ஒருகையால் இருபழங்களையும் மார்போடு அணைத்துக்கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது.
ஆனால் ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது. அதைக்கண்டு அந்த குழந்தை அழுதது .இதை கவனித்துக் கொண்டிருந்த அந்த பணக்காரரிடம் அந்த துறவி 'இந்த குழந்தையை பார்த்தாயா? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?'
அதே போன்றுதான் 'போதும்' என்ற திருப்தி ஏற்பட்டுவிட்டால் பிரச்சனை வாரது. நிம்மதி கிடைக்கும்.
பணக்காரருக்கு தனக்கு ஏன் நிம்மதி இல்லை என்ற விவரம் புரிந்துவிட்டது.
உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு!!!!! இந்த
வரியைக் கேட்கும் போது மனம் நெகிழ்கின்றது....
நன்றி!(பல்சுவைப்பதிவுகள்)
7 comments:
Nalla thathuvam. . Nandri
@"என் ராஜபாட்டை"- ராஜா Thanks!....
@"என் ராஜபாட்டை"- ராஜா Again Thanks!….
nalla irukkungka.. vaalththukkal
@மதுரை சரவணன் Thanks!....
same feeling.....
thanks for your post.
@malgudiOk friend. Thanks your Visit and Comment.
Post a Comment