Sunday, December 18, 2011

வெடி மாஸ்டர் வட் நோ கன்-1(But No Gun)


நீங்கள்  tea மாஸ்டர் gem ஜிம் மாஸ்டர்  pt மாஸ்டர் என்றால்லாம் அறிந்திருப்பீர்கள். ஆனால் இது  என்ன வெடி மாஸ்டர் அதுவும் நோ கன்  இப்படியும் தலைப்பு என்ற யோசிக்கின்றீர்கள். ஆம் வாசர்களே நான் நீண்ட நாளைக்கு பிறகு ஒரு பதிவை எழுதலாம் என்று நினைத்த போது என் மனதில் இந்த வெடி மாஸ்டர் தான் என் நினைவில் வந்ததர்.அதுவும் ஒரு பதிவை எழுதுவதற்கே இப்ப நேரம் கூட கிடைப்பது அரிதாக இருக்கிறது. ஏன் என்றால் இப்பொழுது நேரம் எல்லாம் வேலையிலே செல்கிறது. சரி இப்ப வெடியை பற்றி நாம் பார்ப்போம். அதுவும் இந்த கதை நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் நடந்த கதையாகும்;(Flashback).

வெடி முத்து

இப்படியாக பள்ளியில் பாடங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் ஐந்தாம் பாடம் முடிந்து ஆறாம் பாடம் தொடங்க மணி அடித்தது. இந்த வேளையில் மாணவர்களின் முகத்தில் ஒரே சிரிப்பு. அது வேற ஒன்றுமில்லை வெடியின் வருகையை எண்ணிப் பார்த்து. இப்படியாக வெடி பாடத்துக்கு நடந்து வருவது எங்களுக்கு தெரிந்தது. (அதுவும் வெடி வருவது சினிமாவில் ஹீரோக்கள் வரும் போது வேக்ரவுன்ட் மியுசிக்குடன்;;,(Background Music) வருவது போல இவரும் அப்படி வருவதை  இப்பொழுதும் நினைக்கையில் சிரிப்புதான் வருகிறது.சில வகுப்பு மாணவர்கள் இவரின் வெடியை அறிந்து இவர் பாடங்களுக்கு வகுப்புக்கு செல்லும் போது மாணவர்கள் மறைந்து நின்று இவரை ''வெடி வெடி''என்று கத்துவதையும் இவர் திரும்பி யாருடா? இது என்று மிரட்டுவதையும் நான் கண்டிருக்கிறேன்.)

இப்படியான வெடி  வகுப்பில் வந்தார். அதுவும் இவர் எடுக்கும் பாடங்கள் சமூகக்கல்வியும் வரலாறும். நாங்கள் இவர் வரும் போது முதலில் எழுந்து நின்று வாழ்தினோம். அதுவும் சில மாணவர்கள் வாழ்த்தும் போது கூட good morning  குட் மொனிங் வெடி என்று மெல்லிய கூரலில் சொல்வார்கள். வகுப்புக்குள் வந்த பின் தனது வரலாறுப் பாடத்தை தொடங்கினார். இப்படியாக படிப்பித்துக் கொண்டிக்கும் வேளையில் திடிரென பாடத்தை நிறுத்தி விட்டு உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமாடா? என்று கேட்கும் போதே  எங்களுக்கு தெரிந்து விட்டது வெடியன் தனது வெடிகளை வீசப்போறான் என்று. டேய் நம்ம கல்லடி பாலமாடா கெஞ்ச நாளைக்கு முன்னாடி அது விழும் நிலையில் ஆடியதுடா! (இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி பிரதேசத்தில் அமைந்த மிகவும் பழைய மற்றும் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் அமைத்த உறுதியான பாலமாகும் மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் பெரிய பாலமாகவும் காணப்பட்டது.)

கல்லடிப்பாலம்

இப்படி பாலம் ஆடிக்கொணடிருந்த வேளையில் மக்கள் பீதியில் இருந்தனர் என்றும் அந்த வேளையில் நானும் என்ட அப்பாவும் கையில் ஒரு ஜக்குடன் பாலம் இருக்கிற ஆற்றில் இறங்கி பார்த்தால் பாலத்தின் கீழே இருக்கிற  நட்டுகள் எல்லாம் லுஸ் ஆகி இருந்தாடா. அதன் பின் உடனே நானும் அப்பாவும் கையில் இருந்த ஜக்கை கொண்டு பாலத்துக்கு கீழே ஜக்கை அடித்து உயர்த்தியடா லுஸ்யாக இருந்த நட்டுகளை எல்லாம் இறுக்கினோம்.  பின்னர் ஆற்றில் இருந்து வெளியில் வந்தால் மக்கள் கூட்டமே எங்களை  நோக்கி வெடிகளை கொழுத்தினார்களடா!(வெடியே உனக்கே வெடியா என்ன கொடுமை சார் இது), பூமாலை எல்லாம் போட்டும்  எங்களை வரவேற்றனர் என்றார். இதை எல்லாம் கேட்ட மாணவர்கள் சிரிப்பை அடக்க முடியமாலும் ஏதோ தங்களுக்குள்; இவறாடா பாலத்துக்கு ஜக் அடிப்பது என்ன வெடியடா என்று முணுமுணுத்துக்கொண்டிருந்தனர், (அதுவும் நான் அறிந்த வகையில் இந்த பாலத்தின் கீழ் பகுதியோ கொங்கிறீட்டினால் அமைக்கப்பட்ட பாலமாகும் இது  ஆடுவதற்கோ நட்டு லுஸ் ஆவதற்கோ வாய்பே இல்லை)


இப்படியாக வெடியின் வெடிகள் முடிய பாடம் முடிந்தாக விட்டதாக மணியும் அடித்தது.அதன்  பின் வெடியும் வகுப்பை விட்டு சென்றார் நாங்களும் இவர் செல்லும் போது கூட மெதுவாக thank you வெடி என்று வழியும் அனுப்பினோம். அதன் பின்னர் மாணவர்கள் இவரின் தொல்லை எண்ணி தாங்க முடியலடா சாமி என்றும் இவர் எப்பொழுது இவர் பரீட்சைக்கு பாடத்தை முடிப்பார் என்று சோகத்துடன் புழம்பியதையும் இப்பொழுதும் நினைக்கையில் சிரிப்பும் மறுபுறம் வெடியின் அகோர தாண்டவத்தை எண்ணி கோபமும் ஏற்படுகின்றது.


  


வெடியின் கோர வெடிகள் தொடரும்......



No comments:

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...